முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகர்: விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் தொழில்நுட்பக் கல்லுாரியில் 1997 - 2000ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது. இதில் தங்களின் குடும்பத்தினருடன் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 25 ஆண்டுகள் கடந்த வெள்ளி விழாவில் கல்லுாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வி.எஸ்.வி.என்., 2கே என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினர்.