பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஊழியர்கள் சங்கம், தொலைத் தொடர்பு ஊழியர்கள் சங்கம் உட்பட அனைத்து ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து தமிழக பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் சட்ட விரோத போக்கை கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சண்முகராம் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.