உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சென்டர் மீடியன்

சிவகாசி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சென்டர் மீடியன்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சென்டர் மீடியன்அமைக்கப்பட்டதாலும், வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்திற்கும் வழி வகுக்கிறது.சிவகாசி பஸ் ஸ்டாண்டு மேம்படுத்துதல், பூங்காக்கள் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், ரோடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து வெம்பக்கோட்டை ரோடு சந்திப்பு வரை, பி.கே.என்., ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் நடுவில் ரூ. ஒரு கோடியே 6 லட்சம்மதிப்பில் சென்டர் மீடியன் அமைத்து, 130 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடுகள் மிகவும் குறுகிவிட்டது. தவிர இரு புறமும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் எந்த வாகனமும் எளிதில் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் ரோடு மிகவும் குறுகிய நிலையில் ரோட்டின் மேலே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பைபாஸ் ரோடு, மணி நகர் முக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது.இதனால் மற்ற வாகனங்கள் எளிதில் கடந்து செல்லமுடியாத நிலையில் விபத்தும் ஏற்படுகிறது. சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !