சி.ஐ.டி.யு., சிறை நிரப்பும் போராட்டம் 361 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு தமிழக அரசு பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தல், ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்தல், ஓய்வூதியர்களின் நிலுவைகளை வழங்குதல், அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மண்டல பொதுச் செயலாளர் போஸ், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் தேவா, தலைவர் திருப்பதி உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 361 பேரை போலீசார் கைது செய்தனர்.