மேலும் செய்திகள்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு ஆர்ப்பாட்டம்
1 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (டிச.30க்குரியது)
2 minutes ago
டெண்டர்களில் தி.மு.க.,வினர் தலையீடு
10 minutes ago
வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு
23 hour(s) ago
விருதுநகர்: விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் இறந்த இருவரின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன. விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 34. இவர் வீட்டில் டிச.25ல் இறந்தார். அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது. இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் பாலாஜியின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் டிச. 25 காலை 10:00 மணிக்கு தானமாக பெறப்பட்டது. இதேபோல் விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தை சேர்ந்தவர் ஜேசுமணி, 80. இவர் வீட்டில் டிச. 24ல் இறந்தார். இவரது கண்கள் டிச. 24 மாலை 5:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது. இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும்' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 minutes ago
2 minutes ago
10 minutes ago
23 hour(s) ago