உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 10 பேர் பலி

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 10 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடந்த வெடிவிபத்தில் 910பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eg9xvp4n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இ.பி.எஸ்., இரங்கல்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன். தமிழகம் முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா? என்பதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்புசாமி
பிப் 17, 2024 16:45

குஜராத்லே வெடிச்சாத்தான் பி.எம் கேர்லேருந்து பணம் வரும்.


vnatarajan
பிப் 17, 2024 15:57

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஆலைகளில் வெடி விபத்து நடக்கத்தான் செய்கிறது பல ஏழை தொழிலாளர்கள் இறக்கத்தான் செய்கின்றனர். இந்த விபத்தை நிறுத்தவேண்டுமானால் அதற்கு ஒரே வழி ஆபத்தான வெடிக்கும் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தினால்மட்டுமே சாத்தியமாகும். இதை செய்யாவிட்டால் ஒவ்வொரு வருடமும் விபத்து நடக்கத்தான் செய்யும். சிவகாசி சாத்தூரில் எட்டு வருடம் ஒரு பெரிய வங்கி அதிகாரியாக வேலை செய்த அனுபவத்தில் இதை கூறுகிறேன்.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
பிப் 17, 2024 15:43

எடப்பாடி பழனிச்சாமியோட இரங்கலோ ஆறுதலோ தேவையில்லை அதிமுக கட்சி பணத்துல இருந்து விபத்தில் இறந்து போன ஏழைகளின் குடும்பத்துக்கு தாராளமாக பணத்தை கொடுத்து உதவ வேண்டும். அதைவிட்டு உங்களோட இரங்கல் எல்லாம் இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையில்லை பங்காளி கட்சிகளான நீங்க ரெண்டு பேரும் இதுலயும் மாத்தி மாத்தி அரசியல் செய்து நடிக்காமல் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இந்த நேரத்தில் உண்மையாக உதவிகளை பண்ணுங்கள்.


Indian
பிப் 17, 2024 14:45

பட்டாசு ஆலைகளை மூடினாள் எதிர்காலத்தில் பல பேருடைய உயிர்களை காப்பாற்றலாம், சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருக்கும் மக்களும் அமைதியான வாழ்க்கை வாழலாம் வெடி சத்தம் இல்லாமல்


Tamilselvan,kangeyam638701
பிப் 17, 2024 15:47

அமைதியா வாழணும்னா ..... நாட்டுக்கு போயி வெடிச் சத்தமே கேட்காது!


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 16:35

எதிலாவது ஆபத்து என்றால் அதை ஒழிப்பதுதான் தீர்வா ????


raja
பிப் 17, 2024 14:32

ஹும் கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் ரூபா பத்து லட்சம் மாடல் அரசு நிவாரண மாக கொடுத்திருக்கும்..... இதுக்கு எல்லாம் பத்து லட்சம் கொடுக்காதே....


விடியல்
பிப் 17, 2024 14:26

இப்படி அடிக்கடி பல இடங்களில் நடைறுவதை அதிகாரிகளோ ஆலை முதலாலிகளோ கவனமாக இருப்பதில்லை தடுப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு முறைமைகளை கடைபிடிக்காமல் உள்ளது வருத்தம்அடையவைக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 14:47

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த இழிநிலை தொடருவது சோகம் ..... விழிப்புணர்வு, பாதுகாப்பு வழிமுறைகளைக் கடுமையாக அமல் படுத்துதல் ஆகியவையே தீர்வு ...... காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் என்று நிவாரணம் அளிப்பது தீர்வாகாது ......


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை