உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் பொருள், சங்கு வளையல்

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் பொருள், சங்கு வளையல்

சிவகாசி; விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் '' முன்னோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது விரலால் சுண்டி விளையாடப்படும் பொருள் கிடைத்துள்ளது. இரும்பு காலத்திற்குச் சான்றாக ஆணி கிடைத்துள்ளது. தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை