உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் 3 மாதங்களாக குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்

திருத்தங்கலில் 3 மாதங்களாக குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்

சிவகாசி : திருத்தங்கலில் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 3 மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் பாண்டியன் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அருகே மூன்று மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. இதனால் அங்கு ரோடும் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். திருத்தங்கல் பகுதியில் கடந்த காலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் தான் 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இது அனைவருக்கும் போதாத நிலையில், அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குழாய் உடைப்பினை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை