உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

விருதுநகர் : விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான 22 வயதுடைய வாலிபரும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரின் வீட்டில் வைத்து இருவரும் தனிமையில் இருந்ததால் சிறுமி கர்ப்பமானார். இதனால் ஆக. 31ல் இருவரும் திருமணம் செய்து தனியாக வீட்டில் வசித்து போது பல முறை தனிமையில் இருந்தனர். மேலும் சிறுமி 4 மாத கர்ப்பமாகி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்த போது சிறுமி கர்ப்பமானதால் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரிந்தது. அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை