உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்

அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் கட்டப்பட்ட வாறுகால் கட்டிய 4 நாட்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டு அன்பு நகர் 8 வது தெருவின் இருபக்கமும் வாறுகால் அமைக்கும் பணியை நகராட்சி செய்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பக்கம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முடிவடைந்து, பின் மறுபக்கம் இயந்திரம் மூலம் பணி செய்ய தோண்டிய போது, எதிரே, உள்ள வாறுகாலின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.கட்டிய 4 நாட்களிலேயே இடிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நகராட்சி அதிகாரிகள் வாறுகாலை தரமான பொருட்களால் கட்டுவதை உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்