உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு

இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு

சாத்துார் : சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் யக்ந நாராயணன் ,கோயில் உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், கோயில் அலுவலர்கள் ,பணியாளர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 944 கிராம் ,ரொக்கம் ரூ 44,26,022 ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தனர். உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ