உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே விஷால் நகரில் வசிப்பவர் அசோதையம்மாள் 75. இவர் நேற்று மதியம் 12:30 மணிக்குவீட்டில் தனியாக இருக்கும்போது, முன்பு அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தற்போது கீழக்கோடங்கிபட்டியில் வசித்து வரும் கொத்தனார் ஜோதீஸ் 31, வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நிலையில் திடீரென அசோதையம்மாளை கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 5 பவுன்தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.தகவலறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் அவரை கைது செய்து தங்க சங்கிலியை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை