மேலும் செய்திகள்
மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம்
19-Jan-2025
சிவகாசி : சிவகாசி அருகே மாரனேரியிலிருந்து இ.டி.ரெட்டியபட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் பல்வேறு கிராம மக்கள் கூடுதலாக 10 கிலோமீட்டர் சுற்றி வெம்பக்கோட்டை, சாத்துார் செல்ல வேண்டியுள்ளது. சிவகாசி அருகே மாரனேரியிலிருந்து இ.டி.ரெட்டியபட்டி நான்கு கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றது. மாரனேரி, விளாம்பட்டி, சிங்கம்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், பூசாரிப்பட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் தாயில்பட்டி சாத்துார் வெம்பக்கோட்டை செல்வதற்கு இ.டி., ரெட்டியபட்டி வழியாகத்தான் செல்வர். ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் சிவகாசி வந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாக 10 கிலோமீட்டர் அலைகின்றனர். மேலும் இதே ரோட்டில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களும், விவசாயிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
19-Jan-2025