உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

 இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரி அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ 34 லட்சத்து 56 ஆயிரத்து 768 ரொக்கம். தங்கம் 104 கிராம், வெள்ளி 1385 கிராம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் மகளிர் சுய உதவி குழு பெண்கள், கோயில் பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி