சிவகாசியில் கொடி கம்பங்களை ஏப்.17க்குள் அகற்ற உத்தரவு
சிவகாசி : சிவகாசியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை ஏப். 17 க்குள் அப்புறப்படுத்தாவிட்டால், இடித்து அகற்றப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிவகாசி மாநகராட்சியில் ரோட்டோரம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப். 17 க்குள் அகற்ற வேண்டும். அகற்றப்படாத கொடிக்கம்பங்களை, மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்திவிட்டு அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து வசூலிக்கப்படும் என, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.