உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி சுற்றுச்சாலை அடுத்த கட்ட பணிகளுக்கு மண் பரிசோதனை

சிவகாசி சுற்றுச்சாலை அடுத்த கட்ட பணிகளுக்கு மண் பரிசோதனை

சிவகாசி:சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், அடுத்த இரு கட்ட பணிகளுக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள்நடப்பதால் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் - - சிவகாசி, எரிச்சநத்தம் -- - சிவகாசி, சிவகாசி - - - கன்னிசேரி, விருதுநகர் -- - சிவகாசி, சாத்துார் - - - சிவகாசி-, கழுகுமலை- - சிவகாசி - ஆலங்குளம்- - , சிவகாசி -- வெம்பக்கோட்டை ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. சுற்றுச் சாலை பணிக்காக ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர், கொங்கலாபுரம், திருத்தங்கல், கீழத்திருத்தங்கல், வெற்றிலையூரணி, நாரணாபுரம், அனுப்பன்குளம் ஆகிய 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த 82 நில உரிமையாளர்களிடம் இருந்து 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சாலை பணிகளை 3 பிரிவுகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி,சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் சாலைகளை இணைக்கும் வகையில் 10.5 கிலோ மீட்டருக்கு ரோடு அமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது, 3ம் கட்ட பணிகளுக்கான நில எடுப்பு பணிகள் 100 சதவீதம் முடிந்த நிலையில், மண் பரிசோதனை செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, அதிகாரிகள் செய்து வருகின்றனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்கூறுகையில், முதற்கட்ட சுற்றுச்சாலை பணியில் பெட்டிப்பாலம், குறுக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த இரு கட்ட சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்தில் வடமலாபுரம் முதல் நாரணாபுரம், சுந்தராஜபுரம், கொங்கலாபுரம்,ஆலங்குளம் ரோடு வழியாக பூவநாதபுரம் விலக்கு வரை 23 கிலோ மீட்டர்துாரத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக ரோடு அமைய உள்ள பகுதியில் மண் பரிசோதனை, பாலம் அமைய உள்ள இடங்களில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை