உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு விழா

எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு விழா

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் 56 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. ஸ்டாண்டர்டு, பெல், பயோனியர், டென்சிங் அணி ஆகிய அணிகளின் அணிவகுப்பு நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் தேசிய கொடியை ஏற்றினார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலர் அருணா கல்லுாரி கொடி ஏற்றினார். கல்லுாரி நிர்வாக குழு தலைவர் திலகவதி ஒலிம்பிக் கொடி ஏற்றினார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்டாண்டர்டு அணியினர் குழு கேடயத்தை பெற்றனர். மாணவி பொன் பாரதி தனித் திறனுக்கான கேடயம் பெற்றார். மாணவி சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ