வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந் தோணிராஜ் தலைமையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் குருநாகப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.