உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பிப்.7 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம், வனத்துறை தெரிவித்துள்ளது. இங்கு பிப்.7ல் பிரதோஷம்,பிப். 9ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது.இதனை முன்னிட்டு பிப்.7 முதல் பிப்.10 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படவுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களையும், பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ