உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது

சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது

சிவகாசி: சிவகாசியில் இந்திரா நகரைச் சேர்ந்த கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஆணையூர் ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் தங்கபாண்டியனை 35, கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் இருவரை கைது செய்தனர்.சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சி துணை தலைவர் முத்துமாரி. இவரது கணவர் தங்கபாண்டியன் 35. முத்துமாரியின் சகோதரிக்கும் அவரது கணவரான சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்த கணேசனுக்கும் 37, இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அரிவாளால் வெட்டியதில் கணேசன் இறந்தார்.டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இந்திரா நகரை சேர்ந்த சிலம்பரசன், அய்யனார் காலனியை சேர்ந்த மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ