| ADDED : ஆக 22, 2011 12:30 AM
விருதுநகர் : விருதுநகரில் ம.தி.மு.க பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு
பேசினார்.விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ம.தி.மு.க.,
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் தலைமை
வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., வரதராஜன் தலைமை செயற்குழு உறுப்பினர்
கே.வி.ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் நகர பொறுப்பு குழு தலைவர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார். பொது
செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொறியாளர் அணி அமைப்பாளர்
குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், விருதுநகர் வடக்கு
ஒன்றிய செயலாளர் வி.வி. சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள்
ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண
மூர்த்தி, திருத்தங்கல் நகர செயலாளர் சேதுராமன், இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்
துணை அமைப்பாளர்கள் சிவகாசி ரவி, அனந்தப்பநாயக்கன்பட்டி ரமணன்,
ராஜபாளையம் நிவாஸ், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.சாமிக்கன், ஜெயராம்,
கோவிந்தன், சுப்புராம், தியாகராஜன், மகேந்திரன், நாகராஜ் உட்பட நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.