உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்தாரம்மன் கோயில் தசரா விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

முத்தாரம்மன் கோயில் தசரா விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, காலை 8 மணியளவில் கொடியேற்றப்பட்டது. மொத்தம் பத்துநாள் திருவிழாவில், தினமும் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசூரசம்ஹாரம், பத்தாம் நாளான, அக்.,6ம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. ஆணவம் கொண்டு போரிடும் சூரனை, அம்மன் வதம் செய்யும் இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பர். நேர்த்திக்கடனுக்காக பல்வேறு வேடங்களை அணிந்து குழுக்களாக கிராமம் கிராமமாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரிக்கும் பக்தர்கள், அன்று கோயிலைச்சேர்ந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். மைசூரில் நடக்கும் தசரா பண்டிகைக்கு இணையாக இந்த திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
ஆக 30, 2025 22:53

நாட்டில் பொதுவாகவே குற்றங்கள் அதிகரித்துவிட்டது .பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் காவல்துறை கண்காணிப்பு அதிகாமத்தேவை .கோயிலுக்குவருபவர்கள் ஆயுதங்களை எடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது . எப்படி உருட்டுக்கட்டையுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் ?


மேலும் செய்திகள்