உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில், பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரி, எம்.என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, எம்.என்.ராதாகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, “கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கடைசியாக 1849ல் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது.பின், சைவ, வைணவ பிரிவினர் இடையேயான மோதல், பொது தீட்சிதர்கள் எதிர்ப்பால், பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை,” என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், “கோவில் நுழைவு வாயில்களை திறப்பது தொடர்பாக, 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிரம்மோற்சவம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோவில் சன்னிதியில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது.பிரம்மோற்சவம் நடத்துவது மரபு விழாவா என்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த, 400 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மோற்சவம் நடக்கவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை கொண்டு வர, அரசுக்கு அதிகாரமில்லை,” என்றார்.அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “400 ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவம் இப்போது நடத்தப்பட வேண்டும். உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை. அதன்படியே, பிரம்மோற்சவம் நடத்த அனுமதியளித்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்த கோரியுள்ளனர்,” என்றார்.பொது தீட்சிதர்கள் சார்பில், வழக்கறிஞர் ஹரிசங்கர் ஆஜராகி, “மரபு விழாக்களாக இருந்தால், எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்,” என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது' என, கேள்வி எழுப்பினர்.மேலும், இந்த விவகாரத்தில் மரபு, சட்ட விதிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், வழக்கின் விசாரணையை ஜூன் 24க்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Lion Drsekar
மே 11, 2024 13:59

ஹிந்துக்களை ஈரோடு அழிக்க மிகப்பெரிய இயக்கங்கள் பல தலைமுறையாக இதையே முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு வரும் நிலையில் , இங்கு இப்படி ஒரு நிலை அற்புதம் , வந்தே மாதரம்


Sivagiri
மே 11, 2024 12:08

ஆதிகாலம் தொட்டு , கைலாயம் முதல் கன்னியாகுமரி வரை சைவமே , சிவமே இருந்தது , இருக்கிறது


Ramanujadasan
மே 11, 2024 14:24

இதன் பெயர் பொய் மட்டும் புரட்டு


Sampath Kumar
மே 11, 2024 11:52

இங்கே பதிவிடும் அஙேக வியாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேடும் சிவன் கோவிலில் பெருமாள் சன்னதி உண்டு அனால் பெருமாள் சன்னதியில் சிவன் கோவில் இருக்க முதல பதில் சொல்லு ஏன் ? பதில் சொல்ல முடியாது முடியாது உங்க அக்கப்போரால் நிச்சயம் நலிந்து தான் போகும்


Ramanujadasan
மே 11, 2024 14:27

பெருமாள் கோவில்களில் பெருமாளை எல்லோரும் சேவிக்கிறார்கள் , மற்ற தெய்வங்களை அல்ல எனவே மற்ற சிறு குறு தெய்வங்களுக்கு அங்கே சந்நிதி இல்லை சிவன் கோவில்களில் சிவன் பெருமாளை சேவிக்க ஏதுவாக அங்கே பெருமாள் சந்நிதிகள் உள்ளன


Ramanujadasan
மே 11, 2024 11:46

சிலர் இங்கே கடந்த சில வருடங்களாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரமோத்சவம் நடக்கவில்லை


Sivagiri
மே 11, 2024 11:44

எந்த பெருமாள் கோவிலிலும் , சிவனோ , அம்மனோ , முருகனோ , விநாயகரோ , அய்யப்பனோ , நுழைய முடியாது அதே போல , சுத்த வைஷ்ணவர்களே பெருமாள் கோவிலில் அர்ச்சகர்கள் ஆக முடியும் ,


Ramanujadasan
மே 11, 2024 14:29

உண்மை தான் அரண்மனைகளில் ராஜாதி ராஜா மட்டுமே வாழ முடியும் , வேண்டும் , சிறு அரசு அதிகாரிகளோ பிச்சை எடுப்பவர்களோ அல்ல


TCT
மே 11, 2024 11:00

For the past years there is no Brahmorchavam for Govindaraja perumal This was accepted by all peoples of Tamil Hindus including DMK government is run


Ramanujadasan
மே 11, 2024 11:11

For the past years there is no Brahmorchavam for Govindaraja perumal:


Ramanujadasan
மே 11, 2024 10:58

அடாவடி இயல்களில், அழித்தொழிப்பு செயல்களில் இறங்குவதில்லை கீதையில் கண்ணன் சொல்லும் படி யார் எந்த தெய்வத்தை , எப்படி வணங்கினாலும் தற்காலிக பயன்களுக்கு , மற்ற மதத்தை தெய்வத்தை ஆராதிக்கின்றனர்


Ramanujadasan
மே 11, 2024 10:22

திருசித்திர கூடம் என ஆழவார்கள் இந்த திவ்ய தேசத்த்தை மங்களாசாசனம் செய்த்து உள்ளனர் , அங்கே சிவன் கோவில் வந்தது சில நூறு வருடங்களுக்கு முன்னே தான் சில வெறி பிடித்த சைவ மன்னர்களாலும் சைவர்களாலும் அங்கே இருந்து கோவிந்தராஜ பெருமாள் திருமேனி அகற்றப்பட்டு , கடலில் எறியப்பட்டு பின்னர் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளார் அந்த பாவம் காரணமாக சிதம்பரம் சிவன் கோவில் பல இடையூறுகளை சந்தித்து வருகிறது


Ramanujadasan
மே 11, 2024 10:17

உண்மைக்கு புறம்பாக கருத்து என்று உளற வேண்டாம் கார்த்திக் சிதம்பரத்தில் இருந்த கோவிந்த ராஜ பெருமாளை அங்கிருந்து அப்புறப்படுத்தியது யார் சோழ மன்னன் தானே அதற்க்கு சில தீவிர வாத சைவர்களும் உடந்தை எனவே அவைகளை போல நீங்களும் வைணவ எதிர்ப்பு கொள்ள வேண்டாம்


NRajasekar
மே 11, 2024 09:35

இது கடவுள் பக்தியால் உற்சவம் நடத்த உள்ள ஏற்பாடு அள்ள அரசாங்கம் தன் கட்டுபாட்டுக்குள் இந்த பழமைவாந்த மன்னர்களாள் கட்டபட்டு இன்று வரை ஒழுங்கான பூஜைபுனஸ்காரத்துடன் செயல்படும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ