உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேர் கைது

கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கி விற்ற மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கி கொடுத்த, சென்னை மதுரவாயல் சிவக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் கைது செய்தனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தெய்வீகன், 35, சூளாங்குறிச்சி அய்யாசாமி, 55, அரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.இதில், சிவக்குமார், சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனங்களில், மெத்தனால் வாங்கி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தனியார் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்கள் ஐந்து பேர் உட்பட மொத்தம் ஏழு பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 06:49

அரசின் மெத்தப்போக்கினால் மொத்தமாக மெத்தனால் வியாபாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் மக்களே சொல்லுங்கள்


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 05:06

பாண்டிச்சேரியில் நாடகம் போடமுடியவில்லை என்ற விரக்தியில் உண்மையான குற்றவாளிகளை பிடித்து விடுவார்கள் என்று நம்புவோமாக. சொற்ப விலையில் மது உற்பத்தி செய்து அதை கொள்ளை விலையில் விற்பதால் கள்ளச்சாராயம் பெருகியிருக்கிறது. ஏழைகள் பரம ஏழைகளாகவே இருக்கிறார்கள். டாஸ்மாக் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே சேவை செய்து இரத்தம் குடிக்கிறது. ஏழைகளுக்கு சேவை செய்ய மலிவு விலை கள்ளச்சாராயதாலேயே முடியும். அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் டாஸ்மாக் மீது மட்டுமே கவனம் இருப்பதால் மலிவு விலை மது என்பது அடிமட்டத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்றாகி விட்டது. இதை ஒழித்தால் தீம்காவினரின் அதிருப்திக்கு ஆளாகவேண்டும். ஒருவேளை கட்சி மூலம் கள்ளச்சாராயம் எப்படி விசமில்லாமல் காய்ச்சுவது என்று இரகசியமான பயிற்சிப்பாசறை கூட வரலாம்.


ram
ஜூன் 25, 2024 03:44

குற்றம்செய்தவனை விட அந்த குற்றத்துக்கு துணை போனவன் தான் முதல் குற்றவாளி... துணை போன அந்த மாமனிதர்கள் எத்தனை பேரை பிடித்தார்கள்... அங்க அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.. ஏன்னா இதெல்லாம் பெரிய அளவிலே அரசியல் மற்றும் காவல்துறை கன்கானிப்பில் மற்று கவனிப்பின் கீழ் படு ஜோராக நடக்கும் தொழில் இது..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை