சென்னை:சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் உட்பட, 36 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், இந்த தடம் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் மாலை 5:40 மணி விரைவு ரயில், வரும் 23, 25, 30, ஜூலை 2, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது ஜெய்ப்பூர் - சென்ட்ரல் இரவு 7:35 மணி ரயில், 21, 23, 28, 30, ஜூலை 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுஇதேபோல், லக்னோ - யஷ்வந்த்பூர், பாட்னா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பிலாஸ்பூர் - திருநெல்வேலி, பகத் கீ கோதி - மன்னார்குடி, மதுரை - பிகானீர், மதுரை - ஜபல்பூர், தனாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு உட்பட, 36 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.