உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக வரி வசூலில் அபாரம் 3 மாதத்தில் ரூ.3,727 கோடி வருவாய்

வணிக வரி வசூலில் அபாரம் 3 மாதத்தில் ரூ.3,727 கோடி வருவாய்

சென்னை:'நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், 3,727 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது' என, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிக வரி கூட்டரங்கில், இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மூர்த்தி, துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், ஆணையர் ஜெகந்நாதன் பங்கேற்றனர். கூட்டத்தில், வணிகர் நல வாரியம் சார்பில், மறைந்த வணிகரின் குடும்பத்தினரான, சென்னை மணலியை சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு, குடும்ப நல நிதியாக, 3 லட்சம் ரூபாய் காசோலையை மூர்த்தி வழங்கினார்.அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், தங்களுக்கு கீழுள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் வரி அலுவலர்களுடன் ஆலோசித்து, வரி வருவாயை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இந்த பணிகளை செயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை, அரசுக்கு தெரியப்படுத்தலாம். தரவுகளின் உண்மைத் தன்மையை கண்டறிய, அதிநவீன மென்பொருள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.நடப்பு நிதியாண்டின் ஏப்., மே, ஜூன் மாதங்களில், கடந்த நிதியாண்டை விட, 3,727 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு, முழுவீச்சில் நடந்த வரி வசூல் தான் காரணம். மேலும், நிலுவை வரி வசூலில் தீவிரம் காட்டியதும் காரணம். கடந்த, 2ம் தேதி நுண்ணறிவு பிரிவின் கூடுதல் ஆணையர், அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில், 1,040 கோடி ரூபாய் போலி உள்ளீட்டு வரியை கண்டுபிடித்து, போலியான, 'பில்' வழங்கிய, 316 பதிவு சான்றுகள் ரத்து செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை