உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அதிரடி மாற்றம்

மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து, 40 பேர் பலியானதை ஒட்டி, அதை தடுக்கத் தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.அவர் வகித்து வந்த பொறுப்பை, மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krush
ஜூன் 21, 2024 15:23

இந்த ரெண்டு குமாரும் சோத்துல உப்பு போட்டு திண்றவங்களா இருந்தா வாய தொறந்து பேசட்டும் யார் காரணம்னு ...


sugumar s
ஜூன் 21, 2024 15:04

By reposting them to different region they protect the defaulters and show an eye wash decision to public. He should be sacked with all terminal benefits being withdrawn. If that kind of punishment is done, then higher officials will perform duties diligently


s sambath kumar
ஜூன் 21, 2024 11:15

நல்லவன் கிட்ட தான் பொறுப்பை கொடுத்திருக்கீங்க. வரப் போறவன் ஏற்கனவே சவுக்கு சங்கர் அர்ரெஸ்ட் உள்பட பல விஷயங்களில் இந்த அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்தவன். உங்களை திருத்தவே முடியாது.


Sesh
ஜூன் 21, 2024 10:51

waste of money spent towards this "மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வை ஆணையரகம் Commissionerate of Prohibition &Excise "dept. liquor is selling by govt, how come they prohibit. better abolish this dept and save money. all illegal liquuor sellers are very well known to respective station only, they can control if interested.


D.Ambujavalli
ஜூன் 21, 2024 06:26

முளையிலேயே கிள்ளி எறியாது , முன் இதே மாதிரி பத்து , எட்டு என்று இறப்புகள் நேர்ந்த போது, நிவாரணம் கொடுத்து, அப்படியே ஏதாவது ஆனாலும் பத்து லட்சம் குடும்பத்துக்கு கிடைக்கும், டாஸ்மாக்கைவிட இது மலிவாக கிடைக்கிறது என்று நல்லது, அல்லது எல்லாவற்றிலும் குடிக்கும் அளவுக்கு ஊக்கப் படுத்திவிட்டு, போலீஸ், உள்ளூர் கட்சிக்காரர்கள் எல்லாருடைய ஆதரவுடன் கொடிகட்டிப் பறக்க விட்டுவிட்டு. இன்று போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்தும் கலெக்டரை மாற்றியும் நாடகமாடினால் போன உயிர்கள் திரும்புமா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ