உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவி உயர்வுக்கான கால அளவை குறைக்க கான்ஸ்டபிள் - சிறப்பு எஸ்.ஐ.,க்கள் முறையீடு

பதவி உயர்வுக்கான கால அளவை குறைக்க கான்ஸ்டபிள் - சிறப்பு எஸ்.ஐ.,க்கள் முறையீடு

சென்னை, 'கான்ஸ்டபிள் - சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கால அளவை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் போலீசார் கோரிக்கை மனு அளித்துஉள்ளனர்.தமிழக காவல் துறையில், சட்டம் -- ஒழுங்கு டி.ஜி.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, 1.32 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில், இரண்டாம் நிலை, முதல் நிலை கான்ஸ்டபிள், தலைமை காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் என, ஒரு லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கால அளவை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:காவல் துறையில் இரண்டாம் நிலை கான்ஸ்டபிளாக சேரும் ஒருவர், எவ்வித தண்டனையும் பெறாமல், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு முதல் நிலை கான்ஸ்டபிள் என பதவி உயர்வு வழங்கப்படும். 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமை காவலர். அதுவே, 25 ஆண்டுகள் என்றால், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த 2006ல் இருந்த போலீசாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால், சிறப்பு எஸ்.ஐ., என்ற நிலையை அடைவதற்கு முன், ஓய்வு பெற வேண்டிய நிலையில் உள்ளோம். எங்களுக்கான பதவி உயர்வுக்கான கால அளவை குறைப்போம் என, 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். அதன்பின், சட்டசபையிலும், கான்ஸ்டபிள் - சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கால அளவை குறைப்பது பற்றி பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தனர்.ஆனால், எல்லாமே கிடப்பில் கிடக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணிபுரிந்தாலும், எங்களால் இன்ஸ்பெக்டர் என்ற நிலையை கூட அடைய முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை