உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளியில் மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: நெற்றியில் மத அடையாளங்களை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாணவர்களின் கையில் கயிறு கட்டக் கூடாது என எப்படி சொல்லலாம். நெற்றியில் திலகம் வைக்க தடை விதிக்கக் கூடாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31utlfv8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கையில் கயிறு கட்டியிருப்பது ஜாதி கயிறு என எப்படி சொல்ல முடியும். நீதிபதி சந்துரு குழு உள்நோக்கத்துடன் ஹிந்துகளுக்கு எதிராக பரிந்துரைக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி ஜாதி கட்சியா இல்லையா?. நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 'நான் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்துள்ளேன். இது என்ன கட்சி ?' என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

S. Neelakanta Pillai
ஜூன் 20, 2024 10:38

எனக்கு என்னமோ இவருடைய பதவி காலத்தில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது


Ragavan
ஜூன் 20, 2024 10:16

கயிறு கட்ட தடை விதித்தால் ஜாதி ஒழித்து விடுமா ஜாதி என்பது அவரவர் நடவடிக்கைளை தெரிந்துவிடும் கயிறுகளை ஒழிப்பதன் ஜாதி அழுந்துவிடும் என்பது மூட நம்பிக்கை ஒழிப்பாளர்களின் மூடநம்பிக்கை


V RAMASWAMY
ஜூன் 20, 2024 09:51

பல ஊர்களில் இந்துக்கள் கூட முஸ்லீம் பக்கீர்களிடம் சென்று மந்திரித்து கழுத்திலும் கையிலும் கயிறு கட்டும் நிகழ்வுகள் இன்றுவரை நடைபெறுகின்றன. பல முஸ்லிம்கள் கயிறு கட்டிக்கொள்கிறார்கள், இவற்றையெல்லாம் கூட தடை செய்வார்களா? சட்டசபைகளில் இவர்கள் கட்சி எம் எல் ஏக்கள் கூட நெற்றியில் விபூதி, குங்குமம், கையில் கயிறு இவற்றுடன் வருகிறார்களே? அவர்களுக்கும் தடை உண்டா?


Sakthi
ஜூன் 20, 2024 07:55

கையில் கயிறு கட்டக் கூடாது என்பது வரவேற்க தக்கது தான்... ஆனால் நெற்றியில் விபூதி குங்குமம் திலகம் இடுவதை தடுப்பதற்கு எந்த கொம்பாதி கொம்பனுக்கும் தகுதி இல்லை... நீ உன் விருப்பப்படி கடவுள் இல்லை என்று வாழ்ந்துக் கொண்டு இருந்தால், அது உன் விருப்பம் என்றால்... நான் கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு இருப்பது எனது விருப்பம் எனது உரிமைகள் எனது வாழ்க்கை... ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களது வேலையை மட்டும் ஒழுக்கம் தவறாமல் கவனித்து கொள்ளவும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இதை விட்டுவிட்டு சாதி மத பிரச்சினை உருவாக்க வேண்டாம். ஆசிரியர் மாணவர்கள் பிரச்சினைகளில் எப்போது அரசாங்கமும் நீதிமன்றமும் தலையிட்டதோ, அப்போது இருந்து தான் மாணவர்களின் வாழ்க்கையில் கேள்விக் குறி உருவாக ஆரம்பித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்


V RAMASWAMY
ஜூன் 20, 2024 09:45

கையில் கயிறு கட்டுவது, திருநீறு பூசுவது, மத உடை அணிவது, சிலுவை நெற்றியில் பச்சை குற்றிக்கொள்வது இவையெல்லாம் தனிமனித சுதந்திரம், தங்கள் மத சார்ந்த நம்பிக்கை, இவற்றை தட்டி செய்வது அநீதி. ஒரு மதத்திற்கும் ஒரு சாராருக்கும் குறி வைத்து அழிக்க நினைத்து செய்யும் நடவடிக்கைகள் சமூக நீதியாகாது. நீதிபதி சந்துரு என்கிற ஒரு நபர் சொல்கிற நியாய அநியாயங்கள் அவரது சொந்த நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம், அல்லது அரசு செய்யும் கட்சி சாரந்ததாக சார்ந்ததாக இருக்கலாம். அனைத்து மத குருக்களையும் பொது மக்களையும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து அவர்களின் ஏகோபித்த கருத்தைக் கேட்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தங்கள் கட்சி சார்ந்த மக்கள் எதிர்க்கும் கொள்கையை திணிப்பது ஜனநாயகமாகாது, சமூக அநீதியாகும். அரசியல் கட்சிகளும் இந்து அமைப்புக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இம்மாதிரி முயற்சிகளையும் ஆரம்பித்திலேயே நிறுத்தவேண்டும்.


varagoor
ஜூன் 19, 2024 22:36

ஹிஜாப் அணியலாமா


varagoor
ஜூன் 19, 2024 22:35

ஹிஜாப் அணியலாமா ?


Subramanian
ஜூன் 19, 2024 21:50

Government may be diverted the kallakurichi issues today. Opposite party can raise the voice both the cases


அப்பாவி
ஜூன் 19, 2024 21:29

அரைஞாண் கயிறாவது கட்டலாமா?


Ramesh Sargam
ஜூன் 19, 2024 20:43

இப்படியே விட்டால் கல்யாணமான பெண்கள் கழுத்தில் உள்ள அந்த புனிதமான தாலிக்கயிறு கட்ட கூட தடை விதிப்பார்கள். தமிழக மக்களே விழித்தெழு. போராடு. நம் பண்பாட்டை மீட்டு எழு.


venugopal s
ஜூன் 19, 2024 20:03

ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தமிழக பாஜகவினரை இப்படி புலம்ப வைத்து விட்டாரே!


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 20, 2024 09:42

நல்ல இந்துவா இருந்த எல்லோருக்கும்தான் கோவம் வரும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ