உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு முன்னுரிமை

சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு முன்னுரிமை

மதுரை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து பா.ஜ.,வில் பேச்சு துவங்கியுள்ளது. இதில் அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக முக்கிய பதவியில் உள்ளோர், சீனியர்கள், பிரபலங்கள், கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையே முழுக்க முழுக்க களமிறக்கினர். மாநில தலைவர் அண்ணாமலையே தான் வேட்பாளராக்கப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை.லோக்சபா விவாதங்களில் பங்கேற்கும் அளவு படித்த, அனுபவமுள்ளவர்கள் தேவை என்பதாலும், இதில் குறைவான சீட்களே உள்ளது என்பதாலும், முக்கிய பிரமுகர்களை நிறுத்துவதன் மூலம் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றுவது, மற்ற இடங்களில் கட்சி வலிமையாக உள்ளது எனக்காட்டுவது, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளியது என்று பெயரெடுப்பது என்ற திட்டங்களுடன் செயல்பட்டனர். இதற்காக திராவிட கட்சிகளைப் போல நிர்வாகிகளுக்கு பணம் தண்ணீராக செலவிடப்பட்டது. ஆனால் மற்ற கட்சிகளைப் போல போதிய வலுவான கட்டமைப்புடன் இல்லாததால் அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேர வில்லை. ஆங்காங்கே உள்குத்து மோதலாக வெடித்துள்ளது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் கட்சியை வலிமைப்படுத்த புதிய யுக்தியுடன் களமிறங்க வேண்டும் என மாநில தலைமைக்கு நிர்வாகிகள் யோசனை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் சில தகவல்களை நிர்வாகிகளுடன் பகிர்ந்துள்ளார்.சட்டசபை தேர்தலில் அதிக சீட்களில் போட்டியிட முடியும் என்பதால் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். இதற்காக இப்போதே களமிறங்க வேண்டும். தேர்தல் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளரை அடையாளம் கண்டு தெரிவிப்பர். அவர்கள் தங்களுக்கான தொகுதியில் தீவிர பணியாற்ற வேண்டும்.பத்தாண்டு அனுபவம் உள்ள, தொகுதியில் குறிப்பிடத்தக்க சேவை செய்து செல்வாக்கு பெற்றவர்களுக்கே அதிக வாய்ப்பு தரப்படும். சட்டசபையில் சீட் கிடைக்காவிடினும் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே வெற்றி பெறுவதை இலக்காக வைத்தே வரும் நாட்களில் செயல்பட வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MADHAVAN
மே 04, 2024 17:07

ரேவண்ணா மாதிரி இளைஞருக்கு பிஜேபில நல்ல மவுசு போல


MADHAVAN
மே 03, 2024 16:35

ரேவண்ணா மாதிரி இருந்தா மோடி வந்து பிரச்சாரம் உடுப்பாரு


கடல் நண்டு
மே 03, 2024 15:12

நல்ல முடிவு ஆனால் அதே நேரத்தில், தன்னலம் துறந்து பொது நலன் என்ற நோக்கில் , அயராது உழைக்கும் , படித்த , அரசியல் அறிவார்ந்த அண்ணாமலை போன்ற துடிப்பான இளைஞர்களை களமிறக்கினால் தான் இந்த புரையோடும் திராவிட விஷங்களை களையெடுக்க முடியும்


Sampath
மே 03, 2024 13:03

வேலையில்லாமல் தான் வடநாட்டுல இருந்து ஆட்களை பிடித்து வருகிறீர்களோ?


Vathsan
மே 03, 2024 10:48

ரேவண்ணா, ராகவன் இது மாதிரி இளைஞர்களுக்கு முன்னுரிமை


சோழநாடன்
மே 03, 2024 07:43

இளைஞர்களுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிக வாய்ப்பு என்று அறிவித்துள்ள பாஜகவிற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் ஆதரவு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே, பாஜக இளைஞர்களுக்கு வலைவீசுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது இளைஞர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பைத் தாருங்கள் மிஸ்டர் மோடி


சுராகோ
மே 03, 2024 08:38

வேலை வாய்ப்புக்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது வேலை செய்யத்தான் ஆள் இல்லை


Venkatesan
மே 03, 2024 09:04

இருக்குற வேலைக்கு இங்க தகுதியான ஆள் இல்லை அது தான் உண்மை


Gopal,Sendurai
மே 03, 2024 09:08

உன்னோட பெயரை அறிவாலய அடிமை நாடன் என்று மாற்றி வைத்துக் கொள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை