உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, திருப்பூர் உட்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, திருப்பூர் உட்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 17 மாவட்டங்களில் இன்று (ஜூன் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஜூன் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

ஜூன் 5ம் தேதி

ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் ஜூன் 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ