மேலும் செய்திகள்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
1 hour(s) ago | 4
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
3 hour(s) ago | 4
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பாக இருக்கும். நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் 28, தேவாலாவில், 19; பிரையர் எஸ்டேட் பகுதியில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 4
3 hour(s) ago | 4