உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்கறை காட்டாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை தாக்கு

அக்கறை காட்டாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், முதல்வர் ஸ்டாலின் அக்கறை காட்டவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., தனது நிர்வாக தோல்விகளை மறைத்து, மக்களுக்கு தேவையே இல்லாத விஷயங்களை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மதிப்பு கொண்டவர். ஆனால் அரசியலமைப்பை ஏதோ பிரதமர் இப்போதுதான் நினைவில் கொண்டு வணங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது முரணானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wmt1d8c1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசியலமைப்பு சட்டம்

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தலை வணங்க செய்ததே இந்தியா கூட்டணி தான் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். மோடியின் வாழ்க்கையைப் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையைப் பற்றியும், தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, நாடு முழுவதும் சந்தர்ப்பவாதிகள், வாரிசுகள், ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு அமைப்பாகும்.

இண்டியா கூட்டணி

லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியால், பா.ஜ.,வை நெருங்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி தேடுவது என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அது போன்றதொரு உலகில் முதல்வர் ஸ்டாலின் தனது தார்மீக வெற்றியை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய காரணங்களை கூறி விழா கொண்டாடுவதற்கு பதில், தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், முதல்வர் ஸ்டாலின் அக்கறை காட்டவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Venugopal
ஜூன் 17, 2024 16:19

...ஏதாவது பேசுறதுக்கு விஷயம் இல்லனா ஏதாவது வீடியோ வெளியிடலாம், ஆடியோ வெளியிடலாம்


தங்கப்பன்
ஜூன் 17, 2024 08:07

இப்பவே கூவ ஆரம்பிச்சுட்டாரே... தேர்தல் 2026 லதானே?


evanitha van
ஜூன் 17, 2024 07:49

ஆமாம். தமிழர்களுக்கு மிகவும் அவசியமான டாஸ்மாக், கள்ள சாராயம், கஞ்சா போன்றவற்றை பற்றி பேச வேண்டும் அல்லவா?


RajK
ஜூன் 16, 2024 20:28

சென்ற அரசு ஆரம்பித்து வைத்த திட்டங்களை கூட நிறைவேற்றி செயல்படுத்துவதில் சுணக்கம் இருக்கிறது தமிழ்நாட்டில். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இதற்கு ஒரு உதாரணம். திறம்பட தலைமை இருந்தால்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபிஸர்கள் வேலைகளை மேற்பார்வை செய்து நல்ல முறையில் முடித்து வைக்க முடியும். என்னதான் நல்ல ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபீஸ்கள் இருந்தாலும் தலைமையில் இருந்து சற்று அழுத்தம் கொடுத்தால் தான் வேலைகள் திறம்பட நடக்கும் அது கண்டிப்பாக இப்போது நடக்கவில்லை.


Maheesh
ஜூன் 16, 2024 20:26

மத்திய அரசு கொடுப்பதை தடுத்து நிறுத்தாமல் இருந்தாலே தமிழ்நாட்டிற்கு பெரிய நன்மை நடக்கும். தமிழ்நாட்டில் பிஜேபி இல்லை என்றாலும் மத்திய அரசு அதிக வேறுபாடு காட்டாமல் இங்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைகளில் ரோடு சந்திப்புகளில் பாலங்களை அதிக அளவில் கட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே விபத்து அதிகமாக நடப்பது தமிழ்நாட்டில் தான். அரசியல் காரணங்களுக்காக சென்னை சேலம் புதிய நெடுஞ்சாலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது திமுக அரசு.


venugopal s
ஜூன் 16, 2024 20:09

இப்படியே எதிர்மறை அரசியல் செய்து கொண்டே இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் போய் விடப் போகிறது!


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 18, 2024 01:59

. மத்திய அரசு எதை செய்தலும் எதிர்க்கும் திருட்டு திராவிட பழக்கம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?


Indian
ஜூன் 16, 2024 20:01

இப்படி தான் தேவை இல்லாமல் பேசி பேசி ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை . திரும்ப திரும்ப தேவையில்லாத பேசினால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்


Dominic
ஜூன் 16, 2024 19:54

கோவையில் கூடம் கண்டு மலைத்துபோய் பித்துகிறார் . மோடியின் பயண ஒத்திவைப்பை மக்கள் பேசக்கூடாது என திசை திருப்பும் முயற்சி. உண்மைகளைஇவர்கள் பேசுவது இல்லை , அதன் விளைவே தேர்தல் தோல்வி.


Ethiraj
ஜூன் 16, 2024 19:13

Around 5000 flats occupied by middle class taking bank loans to the tune of several thousand crores have become unauthorised construction. Revenue dept ,electricity dept,local administration,builders,registration dept have permitted such an huge project CM is not aware of the plight of public allowed court to sleep over the issue last 10 years.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 18:47

ஆமாம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி மீது அக்கறை காட்டவில்லை. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் மீதும் அக்கறை காட்டவில்லை. என்ன மனிதரப்பா இந்த ஸ்டாலின், அவர்களை அம்போ என்று விட்டுவிட்டார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை