உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கலெக்டர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கலெக்டர் ஆஜராக உத்தரவு

சென்னை:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கோமதி. அவரது தாய், பால்வார்த்துவென்றான் தொடக்கப் பள்ளியில், 2006ல் சத்துணவு சமையலராக பணி அமர்த்தப்பட்டார். பணியில் இருந்தபோது, 2017 ஆக., 8ல் மரணம் அடைந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் வேலை கேட்ட கோமதிக்கு, 2021 ஆக., 9ல் சமையலர் பணி வழங்கி உத்தரவிடப்பட்டது. சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், சமூக நலத் துறை துணை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் பரிசீலிக்கவில்லை. எனவே, மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோமதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'போளூர் தாலுகாவில் காலியாக உள்ள 53 பணியிடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் மனுதாரரை, எட்டு வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுபடி தனக்கு பணி வழங்கவில்லை. திருவண்ணாமலை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோமதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. கலெக்டர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி, ஜூலை 12க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை