பிட்டர் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
சென்னை:சென்னை கிண்டி, நாகர்கோவில், உளுந்துார்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி.ஐ.,க்களில், காது கேளாத, வாய்பேச இயலாதவர்களுக்கு, 'பிட்டர்' இலவச சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இதற்கான சேர்க்கை முடிந்த நிலையில், நாளை மறுநாள் வரை, நேரில் சென்று சேரலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 94990 55689 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.