உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பயணிகளை சுட்டு விடுவதாக போதையில் மத்திய போலீசார் மிரட்டல்

ரயில் பயணிகளை சுட்டு விடுவதாக போதையில் மத்திய போலீசார் மிரட்டல்

ஜோலார்பேட்டை: சென்னையிலிருந்து - கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டது. இதில், ரயில் இன்ஜின் முன் பக்கமுள்ள பொதுப்பெட்டியில், கோவை மத்திய ரிசர்வ் போலீசார், 10 பேர் பயணித்தனர். அவர்கள் கழிவறைக்கு செல்லும் வழியில் அமர்ந்து மது அருந்தி, பயணிரை கழிவறைக்கு செல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டனர்.தட்டிக்கேட்டவரை தாக்கிய மத்திய ரிசர்வ் போலீசார், சிலரை துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பயணியர், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றதும் அனைவரும், ரயில் பெட்டியிலிருந்து கீழே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மது போதையில் பயணியரை மிரட்டும், மத்திய ரிசர்வ் போலீசார் பயணம் செய்யும் பெட்டியில், நாங்கள் பயணம் செய்ய மாட்டோம் என கூறினர். இதனால் வேறு வழியின்றி, ரயில்வே போலீசார் அதிரடியாக, மத்திய ரிசர்வ் போலீசாரை, ரயிலில் இருந்து இறக்கினர்.இதையடுத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதன் பின் மத்திய ரிசர்வ் போலீசார், அடுத்து வந்த, ஐதராபாத்திலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 09, 2024 21:23

இவர்களும் மத்திய பாஜக அரசு போலவே அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனரே !


Ramesh Sargam
ஜூன் 09, 2024 12:31

ஐதராபாதிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த மத்திய போலீசார் மீண்டும் ரகளை செய்யமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?


Kanns
ஜூன் 09, 2024 12:27

Reasons for All these Sufferings is V.few UnReserved Coaches And Excess AC Coaches than II Class. Cancel All Undue Free Passes Let them Pay fully & Claim Later. Compel All Railway Personnel to Travel Only by Unreserved Coaches-Things will be Rectified Immediately


Barakat Ali
ஜூன் 09, 2024 09:15

இதுக்கும் மோடிதான் காரணம் .......


RAAJ68
ஜூன் 09, 2024 09:01

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏன் இடம் கொடுப்பதில்லை. அவர்கள் பொதுப் பெட்டியில் ஏன் பயணம் செய்ய வேண்டும் அவர்களுக்கு இவ்வளவு தான் மரியாதையா.


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2024 11:08

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு ரயில்களில் தண்ணியடிக்க அனுமதியுண்டா..? அதைக்கேளு..


S. Narayanan
ஜூன் 09, 2024 08:30

அப்போ மற்றவர்கள் பாதிக்க படலாமா. அதனால் இந்த நிகழ்வு அவர்கள் மனதில் இருக்கும் படி அவர்களுக்கு ஒரு நாள் சஸ்பென்ஷன் மற்றும் 5000 ரூபாய் அபராதம் பிடிக்க வேண்டும்


சண்முகம்
ஜூன் 09, 2024 08:04

பொது இடத்தில், மற்றும் ரயிலில் தடை செய்யப்பட்ட குடியை பாவித்த பாவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை ஏன் இல்லை?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ