செய்திகள் சில வரிகளில்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும், சீர்மிகு சட்டப்பள்ளியில், இரண்டாண்டு எல்.எல்.எம்., முதுநிலை படிப்பு நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை, www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவு செய்யலாம். வரும், 31க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்து, கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என, தமிழக சட்டப் பல்கலை அறிவித்துள்ளது.