உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் அரிசி தரத்தை உறுதி செய்ய உத்தரவு

ரேஷன் அரிசி தரத்தை உறுதி செய்ய உத்தரவு

சென்னை:உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். துறை செயலர் கோபால், உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை பங்கேற்றனர். சக்கரபாணி பேசும்போது, ''தரமான அரிசி, ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். போதிய அளவு பச்சரிசி, புழுங்கல் அரிசி இருப்பு வைக்க வேண்டும். நவீன ஆலைகளில் அரைக்கப்படும் அரிசியில் தரத்தை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை