| ADDED : ஜூன் 01, 2024 02:10 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, நாரை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கு விற்பனை செய்கின்றனர். ஏப்., முதல் ஜூலை வரை நுங்கு, பதனீர் சீசன்.இந்நிலையில், தொழிலாளர்கள் கூறியதாவது:ரியல் எஸ்டேட், செங்கல் சூளை பயன்பாட்டிற்காக பனை மரங்கள் அழிக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. போதிய மழையின்மையால் பனை மரங்களில் காய்ப்பு குறைந்துள்ளது.இதன் காரணமாக, கடந்த ஆண்டு, 1 லிட்டர், 80 ரூபாய்க்கு விற்ற பதனீர், தற்போது, 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நுங்கு கண் 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுவாக பதனீர் ஒரே நாளில் கெட்டுவிடும். சிலர், ரசாயன சர்க்கரை கலந்து தரமற்ற பதனீரை விற்கின்றனர். அவங்களை போன்றவர்களை கண்டறிந்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.