உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவையற்ற 1,500 சட்டங்கள் அகற்றம்: எல்.முருகன் பேட்டி

தேவையற்ற 1,500 சட்டங்கள் அகற்றம்: எல்.முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நாட்டிற்கு தேவையற்ற 1,500 சட்டங்களை அகற்றி இருக்கிறோம்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னை வி.ஐ.டி பல்கலையில் நடந்த குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில், இந்தியாவின் முற்போக்கான பாதை குறித்த மாநாட்டை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் துவக்கி வைத்தார். மாநாட்டில், சட்ட விவகாரங்கள் துறை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் செயலர் ராஜீவ் மணி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் முருகன், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் நியாயம் கிடைக்காமல் சிரமப்படும் நிலைக்கு புதிய சட்டங்கள் முற்றுப்புள்ளி வைக்கும். பழைய சட்டங்கள் இந்தியர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டமாக தான் இருந்தது. அது வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த சட்டம். பாரத தேசம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும். பழைய தேவையற்ற சட்டங்களை அகற்ற வேண்டும். நாட்டிற்கு தேவையற்ற 1,500 சட்டங்களை அகற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்காக தான் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நியாயம் கிடைக்கும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்காமல் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
ஜூன் 24, 2024 07:32

Sack & Punish Judge-advocates Not Punishing PowerMisusing Rulers, their Stooge Officials esp Police, Judges & Vested False Complainant Gangsters esp women, unions, SCs, advocates etc etc


Sundar R
ஜூன் 23, 2024 20:43

1 வெளிநாடுகளில் இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு கூறுகிறார்கள். 2 நம் நாட்டில் மக்களின் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் வழக்கு போடுகிறார்கள். மேற்கூறிய இரு பிரச்சினைகளையும் முதலில் சரி செய்ய வேண்டும்


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 17:44

மக்களுக்கு நியாயம் கிடைக்கும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்.....புதிய சட்டங்களின் பெயர்கள் சமஸ்க்ரிதத்தில் இருப்பதால் விடியல் திராவிடனுங்க எதிர்ப்பு என்று சொல்லுவானுங்க ....இதே சட்டங்கள் உருது மொழியில் இருந்தால் அப்ப மட்டும் வாய் திறக்க மாட்டானுங்க ....தமிழ் நாட்டில் புதிய சட்டங்கள் அமல்படுத்தாவிட்டால் போகட்டும் ..மத்திய அரசு சட்ட சீர்திருத்தம் தொடரட்டும் ....கள்ளச்சாராயம் காய்ச்சுபவன் மேல் 70 வழக்குகள் இருக்குதாம் ..அவன் வெளியில் வந்து மீண்டும் கள்ள சாராயம் காய்ச்சாறான் ...இதுதான் இப்போதைய சட்டம் ...


raja
ஜூன் 23, 2024 17:58

கள்ள சாராயம் காய்சுறவன் மேல குண்டாஸ் சட்டம் பயாது ஆனா கருத்து சொல்றவன் மேல குண்டாஸ் பாயும் விடியல் மாடல் ஆட்சியில்...


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 17:38

Judicial reforms இப்போதைய தேவை ....இது ப ஜா க வின் கொள்கை முடிவிலும் உள்ளது .....ஒரு வழக்கு 40 வருடங்கள் நடந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்காது .


மேலும் செய்திகள்







புதிய வீடியோ