உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கொள்கை திணிக்கப் படவில்லை

மும்மொழி கொள்கை திணிக்கப் படவில்லை

பெ.நா.பாளையம் : 'மும்மொழி கொள்கை திணிக்கப்படவில்லை' என, ஐ.ஜே.கே., மாநில தலைவர் ரவி பச்சமுத்து பேசினார்.கோவை சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள ஆலம் தோட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.,) கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், மாநில தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிக்கப்படவில்லை. தமிழ் மொழியின் மீது பிரதமருக்கு பற்று இருப்பதால், அவருக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. கள் விடுதலை இயக்கத்துக்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகளை இப்போதே துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்'' என்றார்.ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்டின், மாநில நிர்வாகிகள் ஆனந்த முருகன், முத்தமிழ்ச்செல்வன், உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 04, 2025 16:33

தேர்தல் நெருங்க நெருங்க லெட்டர் பேட் கட்சிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள் மற்றும் கூட்டங்களை நடத்த ஆரம்பிப்பார்கள்....!!!


முக்கிய வீடியோ