உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னிப்பு கடிதம் கேட்பதா?

மன்னிப்பு கடிதம் கேட்பதா?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: அ.தி.மு.க., தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்; சசிகலாவும் சந்திக்கிறார். அவரது முயற்சியும் வெற்றி பெறும். ஒருபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்தது கிடையாது என பழனிசாமி கூறிய குற்றச்சாட்டிற்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளேன். அது போதுமானது என நினைக்கிறேன். இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால், அ.தி.மு.க., ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்படி செய்யாமல் வெற்றி சாத்தியமாகாது. இது என் கருத்து மட்டுமல்ல; கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தும் கூட. கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும், அதை ஏற்க மாட்டேன் என என்னைக் குறித்து பழனிசாமி கூறியுள்ளார். என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்ல இவர் யார்? பொதுச்செயலர் வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். அ.தி.மு.க.,வுக்கு ஒரு தொண்டர் தான் தலைமை ஏற்க வேண்டும். இது தான் என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nallavan
ஜூலை 12, 2024 23:56

இவரு எங்க சேர்த்தாலும், முதலமைச்சரா தான் வருவாராம்.


Kadaparai Mani
ஜூலை 10, 2024 11:37

பன்னீர் செல்வம் கவர்னர் பதவி ரெடி


metturaan
ஜூலை 10, 2024 10:59

ஆக மொத்தத்தில் உங்கள் அனைவரின் ஈகோவும் ஒன்றினைந்து கட்சியை வீழ்த்த உபயோகித்து விட்டீர்களே...


Velan
ஜூலை 10, 2024 10:10

முத்திப்போச்ச இனி தூக்கதிலும் பிதற்றல் தான் கதவு உடைத்த கபோதிக்கு


Arasan
ஜூலை 11, 2024 00:18

கட்சி விட்டு கட்சி தாவூம் பல அரசியல்வாதிகளில் இவர் பரவாயில்லை தன் கட்சி தொண்டர்களால் ஒதுக்கினாலும் இவர் கட்சி மாறவில்லை...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை