உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: வழக்கம் போல் மாணவிகள் அதிகம் தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: வழக்கம் போல் மாணவிகள் அதிகம் தேர்ச்சி

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 10), காலை வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.55 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெற்றது. இன்று காலை சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு துறை இயக்குநர் கூறியதாவது: * 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர்* 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி * மொத்தம் 4, 105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி* மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி* கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகம்* அரியலூர் மாவட்டம் முதலிடம் 97.31 % தேர்ச்சி* சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டாவது இடம்* * ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடம்* 1364 அரசு பள்ளிகள் 100 % தேர்ச்சி*வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவில் தேர்ச்சி 82.07* மாணவர்கள் 94.53 சதவீத தேர்ச்சி * மாணவிகள் 88.58 சதவீத தேர்ச்சி* 0.16 சதவீதம் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி அதிகம்* தமிழ் பாடத்தில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு* மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் தேர்ச்சி* மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி - 94. 53 %* கணிதத்தில் 20, 691 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர்தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப் பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 10, 2024 17:23

இதே நேரத்தில் தொழில் பட்டப்படிப்பில் பாதிபேர் கூட தேறுவதில்லை. எண்பது சதவீத மாணவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கில்லை. சிந்திக்க வைக்காத சமச்சீர் கல்வி சீரழிக்கிறது.


திகழ்ஓவியன்
மே 10, 2024 12:38

எல்லாம் புதுமை பெண் திட்டம் தாம் காரணம், குஜராத்தில் மார்க் போட்டான் அது குஜராத் மாடல்


குமரி குருவி
மே 10, 2024 06:04

வெல்லுபவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தோல்வியடைந்தார் கள் சோர்ந்துவிடாமல் முயற்சிக்க வேண்டும் வெற்றி வசமாகும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை