உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்": உயர்நீதிமன்றம் அதிருப்தி

"வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்": உயர்நீதிமன்றம் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது' என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணையும், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் கமிஷனும் விசாரணை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k74uk744&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 01) சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரவு

அப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு தலையிட்டோம். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

R.RAMACHANDRAN
ஜூலை 02, 2024 06:58

மலை வாழ் மக்கள் கள்ள சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துகின்றனர் என்பது ஏற்கத்தக்கது அல்ல. அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் விற்க மாட்டார்கள். கொலை குற்றவாளிகள் அவர்களை பயன்படுத்தி பயனடைந்து பலி ஆடுகளாக ஆக்கி செய்த குற்றத்திலிருந்து தப்பிக்கின்றனர்/தப்ப விடுகின்றனர். நீதி மன்றங்கள் நீதி மன்றங்களாக செயல்படாமல் உள்ளதால் இந்நிலை.


theruvasagan
ஜூலை 01, 2024 22:20

வேலை வாய்ப்பு இல்லாததினால் என்பது இல்லை. வேலைக்கு.போவதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதபடிக்கு இலவசங்களை அள்ளி்த் தந்து மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டம்தான் இந்த சீர்கேடுகளுக்கு காரணம்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 01, 2024 20:23

இப்போ தான் சுடசுட பத்துலட்சம் லம்பா kidaichirukke. இனிமே அந்த ஊரில் எல்லோரும் "தொழில்" அதிபர்கள் தான். என்ன தொழில்னு கேட்காதீங்க.. அது தான் கிளைமாக்ஸ்.. சஸ்பென்ஸ்


karthik
ஜூலை 01, 2024 18:13

நீதிபதிகள் புத்திசாலிகள் என்று அர்த்தம் இல்லை என்று நிரூபிக்கிறது இவரது கருத்து.. நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கிறது.. மக்களின் ஆசை தான் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்பது இவருக்கு புரியவில்லை..


N Srinivasan
ஜூலை 01, 2024 16:15

கட்டுமானம், உணவகங்கள், விவசாயம், தொழிற்சாலைகள், நெசவு இன்னும் பல தொழில்களில் வடமாநில மக்கள் வேலை செய்கின்றனர். இதெல்லாம் நம்ம வக்கீல்களுக்கு கண்ணுக்கு தெரியாதா தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்னும் பொழுது என் வட மாநில மக்களை வேலைக்கு வைக்கிறீர்கள்


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 01, 2024 15:37

சாராயம் காய்ச்சுவதையே ஒரு வேலைவாய்ப்பாகக் கருதியேதான் இதைச் செய்கிறார்கள். இதுவும் ஒரு தொழிலென்றே செய்கிறார்கள். இந்தத் தொழிலைச் செய்ய அரிசியில் வாதிகள், காவல் அதிகாரிகள் என பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். இப்போது காய்ச்சுபவருக்கு வேறு வேலைவாய்ப்பை வழங்கினாலும் இந்தக் காய்ச்சுதலை உபதொழிலாகத்தான் தொடர்வார்கள்.


MADHAVAN
ஜூலை 01, 2024 14:40

கள்ளத்தனமான சாராயம் வாங்கி குடிச்சு செத்துப்போன மக்களுக்காக நீதிபதிகள் தங்களது நேரத்தை வீணாக்காமல், மக்களுக்கு உரிய நேரத்தில் நல்ல தீர்ப்பு வழங்கும்,


Sivak
ஜூலை 01, 2024 14:35

ஓ திராவிட நீதிபதியா? வேலை வாய்ப்பு இல்லாததால் லைட்டா திருடிக்கலாமா யுவர் ஆனர் .. அப்புறம் ஒரே ஒரு கொலை பண்ணிக்கலாமா யுவர் ஆனர் ...


Vijay D Ratnam
ஜூலை 01, 2024 14:15

ஓ, வேலைவாய்ப்பு இல்லையென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுவீங்களோ. அப்பாவி மக்களின் பொருளாதாரத்தில், சுகாதாரத்தில், குடும்பத்தில் கையை வைக்க யார் உங்களுக்கு அனுமதியளித்தது. அதைவிட பொது மக்களுக்கு இடையூறு செய்யாத அந்த தொழிலை குடும்பத்தோடு செய்யலாமே.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2024 14:14

ஆக எல்லா மக்களுக்கும் மதுவிலக்கு தாசில்தார் வேலை போட்டுக் கொடுங்க. கள்ளச்சாராயம் ஒழிந்து விடும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை