உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

சென்னை எழும்பூர் -- - கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்களுக்கு, பயணியரின் தேவை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிறுத்தங்கள் பயணியரின் வரவேற்பை பொறுத்து நீட்டிக்கப்படும்.இந்நிலையில், சென்னை எழும்பூர் - -கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூர் -- கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்  சென்னை எழும்பூர் -- திருச்செந்துார் விரைவு ரயில் இருமார்க்கத்திலும், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும், வடமதுரை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை