உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?

ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் ஒரே டூவீலரில் அதிவேகத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு முடிந்த நிலையில், 8ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரே பைக்கில், பள்ளி சீருடையில் மாணவர்கள் ஏழு பேர் பயணித்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் ஒரே டூவீலரில் அதிவேகத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.பள்ளி மாணவர்களை பைக் ஓட்ட பெற்றோர் அனுமதிப்பது தவறு. மாணவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S Ramkumar
ஏப் 22, 2025 15:22

ji sariyaa parunga. ti en என்றுதான் ku


Indian Citizen
ஏப் 22, 2025 14:24

This is happening everywhere. School kids are driving two wheelers crazily and that too in wrong direction in the presence of police. I have seen this in Tambaram MEPZ where police see and don’t take any action on those kids or their parents who gave vehicle to drive in GST Road. I believe no action would ever be taken unless any major incident happens that involves media attention. Until all departments will be sleeping.


Brahamanapalle murthy
ஏப் 22, 2025 14:20

the bike registration shows it is from Jharkand JH, they may be migrant labors, or the bike would have been stolen. Any how deep investigation needs to be done. Police may land up with surprises


Balaji
ஏப் 22, 2025 16:00

Better to get your eyes checked with a good eye doctor... Dont show your hatred to other humans in every situation. Treat each case as per its merit and stop making north Indian issue out of everything.


Srinivasan Ramabhadran
ஏப் 22, 2025 16:57

It is TN only


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 14:05

நமது கழக காவல் துறை ஒன்றுமே செய்யாது. கோவையில் அன்றாடம் சிறுவர்கள் பைக் ஸ்கூட்டர் ஓட்டி செல்வதைக் காணும் போலீஸ்காரர்கள் அமைதியுடன் புன்சிரிப்பை இலவசமாக உதிர்த்துவிட்டே செல்கின்றனர். நடவடிக்கை வேண்டும்என்று எண்ணினால், இந்த ஏழு பேரில் ஒருவர் அண்ணா திமுக தெரு செயலாளர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரின் உறவினர் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று சொல்லிப்பாருங்கள். போலீஸ் படையே வந்து அந்த பையனை கொத்திக்கொண்டு போகும்.


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 20:31

ஆதம்பாக்கம் டாஸ்மாக் வாசல்ல டூ வீலர் பார்க்கிங் முறைப்படுத்துவது போலீஸ் தான்


NACHI
ஏப் 22, 2025 14:05

பள்ளி பருவ புள்ளிங்கோ....அட்டகாசம் தாங்கமுடியால


மீனவ நண்பன்
ஏப் 23, 2025 06:39

அதுவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சாலையில் சென்றால் சர்க்கஸ் செஞ்சு காமிப்பாங்க


ஆதிநாராயணன்
ஏப் 22, 2025 13:56

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்


Bahurudeen Ali Ahamed
ஏப் 22, 2025 13:34

நிச்சயமாக பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 13:33

ஏழை இரண்டாக பெருக்கினால் பதினான்கு, இப்படி அவிழ்த்து விட்ட கழுதைகளை சிறகடித்து சென்ற வாகனத்தை அபகரித்து.. அவங்களுக்கு ஆளுக்கு பதினான்கு முறை சவுக்கடி கிடைக்கவேண்டி இந்த மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது ..


Manalan
ஏப் 22, 2025 13:24

TN police can take action against this kind of the people easily.


Ganesh Ganesh
ஏப் 22, 2025 13:24

முதல்ல இந்த பைக் owner ஐ தூக்கி உள்ள போடணும்.. அடுத்து இந்த பைக் ஓட்டுன்னா பயன தூக்கி வேற ஸ்டேட் உள்ள சிறை க்கு அனுப்பனும்... இவுங்க சாவுறது இல்லாம எதிர் சைடு ல வரவுங்களையும் சாகடிப்பாங்க....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை