உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 91.6 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்

91.6 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த மூன்று மாதங்களில், 91.6 சதவீதம் சரியான நேரத்தில், ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், தாமதமின்றி இயக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில் பாதைகளை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், ரயில்களை சரியான நேரத்தில் இயங்குவது படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களை, மூன்று மாதங்களில் சரியான நேரத்தில் இயக்கியதில், 91.6 சதவீதத்தை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது, 2023ம் ஆண்டில், 90 சதவீதமாக இருந்தது.ஒவ்வொரு மாதமும் 10,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த நிலையை எட்டியது சாதனையே. இதற்கு திறமையான கண்காணிப்பு, சிறந்த பாதை பராமரிப்பு போன்றவையே முக்கிய காரணம்.தெற்கு ரயில்வேயில் மாதத்துக்கு சராசரியாக, 10,712 ரயில்கள் கையாளப்படுகின்றன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை காலகட்டத்தில், தெற்கு ரயில்வேயில், 27,631 ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. கிழக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வேயுடன் ஒப்பிடும் போது, தெற்கு ரயில்வே அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஜூலை 03, 2024 13:46

தற்போதைய ரயில்பயணம், கழிப்பறை நாற்றம் நிறைந்ததாக உள்ளது ..ஒருவிதத்தில் ரயில் பயணம் என்பது தற்போது நரகம் ஆக உள்ளது ..ஐரோப்பிய பயணியர் தொகையை கணக்கிட்டு அமைக்கப்பட்ட ரயில் கழிவறைகள் இந்திய தர நிலைக்கு போதாது ...இந்திய தேவைக்கு, மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் ...ரயில்களில் அளவு மீறி உணவு உண்ணும் பழக்கத்தை , விற்பனையை கட்டுப்படுத்திடுவதன் மூலம் மாற்றியமைக்க வேண்டும் ...


R Hariharan
ஜூலை 03, 2024 12:02

நன்றி. நான் தினமும் 4 அல்லது 5 ரயில் செக் செய்து வருகிறேன். நல்லது. ஆனால் போதிய ரயில் சேவை தென் மாவட்டக்களுக்கு இல்லை. பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி, கன்னியாகுமாரி, திருச்செந்தூர் காரைக்கால் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு செங்கோட்டையில் இருந்து ரயில் சேவை வேண்டும். மீண்டும் திருவந்திபுரம் சென்னை வழி தென்காசி ராஜபாளையம் மதுரை பகல்/ இரவு ரயில் சேவை வேண்டும். சிலம்பு கொங்கு திருக்குறள் மும்பை மதுரை நியூ டெல்லி மதுரை போன்ற பல ரயில் சேவை டெய்லி வேண்டும். மேலும் புறப்படும் சேரும் இடம் சரியாக செல்கிறது. இடைப்பட்ட ஸ்டேஷன்களில் தாமதமாக selkirathu.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 03, 2024 10:06

தெற்க்கே உள்ளவனிடம் நல்ல துட்டு வசூல். இப்போது நான்கு மாதங்களுக்கு முன்பே தீபாவளி பண்டிகை ரயில் முன்பதிவு முடிந்து நிறைய காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பே வசூல் செய்து நல்ல லாபம் பார்த்தாகி விட்டது. ஆனால் போதிய ரயில்களை இயக்காதீங்க. ஏன்னா தெற்க்கே உள்ளவன் இளிச்சவாயன் என்று மோடிஜி அரசு நினைக்கிறது.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 10:27

தெற்கே தான் டிக்கட் வாங்காம ஒளிஞ்சி கிட்டு வந்தவர் முதல்வராக முடியுது. கிரிமினல் கூட்டாளி லாலுவை கூட்டாளியாக வெச்சிக்க முடியுது.


ديفيد رافائيل
ஜூலை 03, 2024 11:45

அதனால தான் மோடிக்கு ஓட்டு போடல. சில இடங்களில் டெபாசிட் கூட வாங்கல


தத்வமசி
ஜூலை 03, 2024 09:55

ரயிலேவே நிர்வாகம் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் உண்மை நிலை இதுவல்ல. ரயில் பயணம் வயதானவர்களுக்கு, குடும்பமாக செல்பவர்களுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு, பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது, டிக்கட் விலையும் குறைவு என்பதால் பயணம் செய்கிறார்கள். அதே போல சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயிலின் பயண நேரத்தையும், அவை தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வந்து சேரும் நேரத்தையும் குறிப்பிட்டு பிறகு எப்படி நேரப்படி எல்லாம் நடக்கிறது என்று கூரச்சொல்லுங்கள்.


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 13:43

அரக்கோணம் -சென்ட்ரல் , கும்மிடிப்பூண்டி -பீச் /சென்ட்ரல் தடம் இன்னும் மோசம் ....சென்னை விரிவடைந்த அளவு , மின்ரயில் சர்வீஸ் விரிவடையவில்லை ..வேலூர் கண்டோன்மெண்ட் வரை ஒரு மணிநேரத்துக்கு ஒரு சர்விஸ் அவசியம் தேவை ..வேலூர் ,ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பஸ் முதலாளிகளுக்காக , இந்த தடத்தின் மின்ரயில் சேவை சீரழிக்கப்படுகிறது ...அதற்கு ரயில்வே உயர் அலுவலர்கள் உடந்தை ....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ