உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்னியர்களுக்கு உருவாகிறது புதிய கட்சி!

வன்னியர்களுக்கு உருவாகிறது புதிய கட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, “பொது பாதையை ஆக்கிரமிச்சிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி. “திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலம், சூரியன் நகர் பகுதியில், மின்வாரியம் சார்புல தனியார் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கி, 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தினாங்க... இந்த டிரான்ஸ்பார்மரை அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு போகும் பொது பாதையில அமைச்சு, சுத்தி கம்பி வேலி போட்டிருக்காங்க பா...“அதன் நுழைவாயிலை பொது இடத்தில் கட்டியதும் இல்லாம, ஓடை புறம்போக்கு இடத்தில் வாகன ஷெட்டும் அமைச்சிருக்காங்க... சமூக ஆர்வலர்கள் புகார்கள் தெரிவிக்கவே, வருவாய் துறையினர் வந்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி பண்ணிட்டு போனாங்க... ஆனாலும், மின் வாரியம், வருவாய் துறை, மாநகராட்சி உட்பட எந்த துறை அதிகாரிகளும் இதை அகற்ற நடவடிக்கை எடுக்கல பா...” என்றார், அன்வர்பாய்.“புகார் கடிதங்களை பதுக்கிடறாங்க ஓய்...” என்றார், குப்பண்ணா. “எந்த துறையில வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“தமிழகம் முழுக்கவே பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை டி.ஐ.ஜி.,க்கள் தான் விசாரிப்பா... ஆனா, சில மேல் முறையீடுகளுக்கு சென்னை, சாந்தோம்ல இருக்கற பதிவுத்துறை ஐ.ஜி., ஆபீசுக்கு தான் போகணும் ஓய்...“பொதுமக்களின் புகார் மட்டுமில்லாம, சார் - பதிவாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கை மனுக்களும் இங்க தான் போகும்... இப்படி வர்ற கடிதங்களை முறைப்படி, வரிசைப்படுத்தி ஐ.ஜி., பார்வைக்கு வைக்கணும் ஓய்... “இந்த பணிகளை எல்லாம், ஐ.ஜி.,யின் நேர்முக உதவியாளரா இருக்கற கூடுதல் ஐ.ஜி., தான் செய்யணும்... 'இப்ப, இந்த பதவியில் இருக்கற பெண் அதிகாரி, பெரும்பாலான கடிதங்கள், கோரிக்கை மனுக்களை பதுக்கிடறாங்க... ஐ.ஜி., பார்வைக்கு எடுத்துண்டு போறதில்ல'ன்னு பதிவுத்துறை ஊழியர்கள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“வன்னியர்களுக்கு புது கட்சி துவங்க போறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “பா.ம.க.,வின் ஒரு பிரிவான வன்னியர் சங்கத்தின் தலைவரா இருந்த காடுவெட்டி குரு காலமாகிட்டாரே... இவரது மகள் விருதாம்பிகையும், இவங்க கணவரும் பா.ம.க.,வுக்கு எதிரா செயல்படுறாங்க... “சமீபத்துல இந்த தம்பதி, குருவின் தீவிர ஆதரவாளர்களை அழைச்சு ஆலோசனை நடத்தியிருக்காங்க... இதுல, 'வட மாவட்டங்கள்ல 70 தொகுதியில வன்னியர் சமுதாயத்தினர் அடர்த்தியா வசிக்கிறாங்க... அதனால, இந்த தொகுதிகள்லயாவது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தணும்'னு வலியுறுத்த முடிவு பண்ணியிருக்காங்க... “பொங்கல் முடிஞ்சதும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த 70 தொகுதிகள்ல பாதயாத்திரை நடத்தவும் முடிவு பண்ணியிருக்காங்க...''தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - காங்., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.வெ.க., ஆகிய கட்சிகள்ல எந்த பதவியும் இல்லாம, அடிமட்ட தொண்டர்களா இருக்கிற வன்னியர் சமுதாயத்தினரை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, தனியா ஒரு கட்சி துவங்கி, தேர்தலை சந்திக்கவும், 'பிளான்' பண்ணியிருக்காங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
டிச 25, 2024 17:03

அட்ரா சக்கை தீ மு க்கா விற்கு கொண்டாட்டம். பண பெட்டிக்கு வேலை வந்தாச்சி


karutthu kandhasamy
டிச 25, 2024 16:30

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ...பிராமணர்களுக்காக எந்த கட்சியும் ஆதரிக்காது .பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது அரசுப்பணியில் வேலை கொடுக்கமாட்டார்கள் படிப்பு வராதவன் ஹோட்டல் வேலைக்கு போவான் நல்லா படிக்கிறவன் ஆடிட்டர் வக்கீல் போன்ற ஒதுக்கீடு இல்லாத வேலைக்குப்போவான் ரெண்டும்கெட்டான் கஷ்டப்படுவான் எந்தக்காலத்திலேயோ யாரோ செய்த தப்பிற்கு இப்போ நாங்கள் அனுபவிக்கிறோம் .ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ஆனால் நாங்கள் தற்கொலை மட்டும் செய்து கொள்ளமாட்டோம்


Aadhi நெடுமாறன்
டிச 26, 2024 11:27

பிராமணர்களை ஒழிக்க வேண்டும் அவர்கள் அணைத்து சமுதாயத்திற்கும் கேடு


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2024 11:24

மிச்சம் மீதி இருக்குற மரங்களுக்கும் ஆபத்து


Anantharaman Srinivasan
டிச 25, 2024 11:16

பத்தோடு இது ஒண்ணு பதிணொண்ணு. இட ஒதுக்கீடு இல்லாமல் போட்டி போட்டு முன்னேற தெரியாதா..?? பிராமினைத்தவிர மற்றவர்களுக்கு சாகும்வரை சலுகை வேண்டும்.


சாண்டில்யன்
டிச 25, 2024 15:29

OC க்கு ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருந்தும் அதில் கேவலம் மற்றவர்களோடு போட்டி போட்டு MERIT ல முன்னேறத் தெரியாதா? இந்த கேள்வியை EWS ஐடா ஒதுக்கீடு கொண்டு வந்தபோது ஏன் கேட்கவில்லை? எதிராளி இளிச்சவாயனாயிருந்தா தம்பி சண்டப் பிரச்சண்டன்தான் என்று ஒரு பழமொழி.


பெரிய ராசு
டிச 25, 2024 10:39

எப்படியோ ஓட்டை பிரிச்சு மரம்வெட்டி குரூப்பு ஒழிஞ்சா சரி


nagendhiran
டிச 25, 2024 11:52

மரம் வெட்டி, வாங்கிய இடஒதீக்கீடு வேண்டாம்னு சொல்லிடுவீயா? அறவேக்காடு?


சாண்டில்யன்
டிச 25, 2024 16:56

வாய்க்கொழுப்பு சீலைல வழிஞ்ச கதையா எப்படியோ என்கவுண்ட்டர்ல மாவு கட்டு போட்டாச்சு


பெரிய ராசு
டிச 26, 2024 19:35

நான் மரவெட்டி இல்ல... மரம் காப்பவனோட முக்க வேக்காடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை