உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு

அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியால், அ.தி.மு.க., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. அதற்கு உடனடியாக பதிலோ, எதிர்ப்போ தெரிவித்து, கூட்டணியில் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத பழனிசாமி, இப்போதைக்கு அமைதி காக்க முடிவு செய்துள்ளார்.கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2023 செப்டம்பரில் பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., முறித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnvmbb3t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்பின், 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தோல்வி அடைந்தன. அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன், கடந்த ஏப்ரல் 11ல் மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானது. அதற்கு வசதியாக, தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். 'கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறி வருகின்றனர். கடந்த 22ம் தேதி, மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 'முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம். ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சிப்பதை பொறுக்க மாட்டோம்' என அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அமித் ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும். முதல்வர், அ.தி.மு.க.,வில் இருந்து வருவார்' என்று கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, முதல் பொதுத் தேர்தலில் இருந்தே கூட்டணி ஆட்சி அமையவில்லை. கூட்டணி அமைத்து வென்றாலும், தி.மு.க., - அ.தி.மு.க., தனியாக ஆட்சி அமைக்கின்றன. எனவே, கூட்டணி ஆட்சி என்ற வாதத்தையே அ.தி.மு.க., எப்போதும் ஏற்றதில்லை.அதுபோல, முதல்வராக பழனிசாமி வருவார் என்று கூறாமல், 'அ.தி.மு.க.,வில் இருந்து வருவார்' என அமித் ஷா கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்த அமித் ஷாவின் பேட்டி தான், அ.தி.மு.க.,வுக்குள் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமித் ஷாவின் கருத்து, அ.தி.மு.க.,வினரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:'பிரதமர் பா.ஜ.,விலிருந்து வருவார்' என பழனிசாமி கூறினால், பா.ஜ.,வினருக்கு எப்படி இருக்கும்? 'டில்லிக்கு மோடி, தமிழகத்திற்கு பழனிசாமி' என அ.தி.மு.க.,வினர் தெளிவாக பேசி வரும் போது, அமித் ஷா, தெளிந்த குட்டையில் கல்லெறிவது ஏன் என்பது தெரியவில்லை. கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அது பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து வெறும் வாயில் மெல்பவர்களுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி, ஹிந்து முன்னணி அவல் கொடுத்தது. இப்போது, அமித் ஷாவும் அவல் கொடுத்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இதை, பொதுவெளியில் பேசி விவாதமாக்க விரும்பவில்லை. அமித் ஷா பேச்சுக்கு பதில், எதிர்ப்பு என எதையாவது பேச மாட்டோமா என்று தி.மு.க., எதிர்பார்க்கிறது. அதற்கு இடம் தந்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, இப்போதைக்கு அமைதி காப்பதே நல்லது என்ற முடிவை எடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.பா.ஜ.,வும் மவுன விரதம்'மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கூட்டணி ஆட்சி தொடர்பாக, யாரும் பொது வெளியில் தங்களின் இஷ்டத்துக்கு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது' என, கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ., எச்சரித்துஉள்ளது.தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டு உள்ளார். இதற்காக, அவரே சென்னை வந்து, அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். அன்று முதல், இந்த கூட்டணியை உடைக்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டு வருகிறது. எனவே, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க, அமித் ஷா தெரிவித்த கருத்து தொடர்பாகவும், கூட்டணி மற்றும் கூட்டணி தலைவர்கள் தொடர்பாகவும், யாரும் எந்தவித கருத்தையும் தங்களின் இஷ்டத்துக்கு பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என, கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ., தலைமை எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

D.Ambujavalli
ஜூலை 06, 2025 17:27

தமிழக பாமர வாக்காளர்களுக்கு திமுக , அதிமுக என்ற இரண்டு முக்கிய கட்சிகளை தான் தெரியும். ஒற்றையா இரட்டையா என்றுதான் வோட்டுப் போடுவார்கள் கூட்டணி வைத்துவிட்டதால் பாஜவுக்கு கிடைக்கும் இடங்களை பார்த்த பிறகு கூட்டணி ஆட்சியா இல்லையா என்று பார்க்க வேண்டும் எருமை சந்தைக்கே வரவில்லை அதற்குள்ளேயே ‘நெய் பிறந்த வீட்டுக்குத்தான் முதலில்’ என்ற கதை போல இருக்கிறது


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 29, 2025 11:31

அதிமுக கடைசி வரை அமைதி காப்பதே அவர்களுக்கும் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும். அதிமுக எதிர்கட்சியாக இருப்பதை விட பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்துவிட்டு ஆட்சி அமைத்தது மத்திய அரசிடம் சலுகைகளை பெற்று ஆட்சி செய்வதே நல்லது தமிழகத்தை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல் வழிவகுக்கும். இன்னும் வரகூடிய குறைந்து 5 தேர்தலில் பாஜக ஆட்சி தான் பாரதத்தில் என நடுநிலை அரசியல் வல்லுனர்களின் கூற்று.


Vijay D Ratnam
ஜூன் 29, 2025 00:18

கவனம் எடப்பாடியாரே, கவனம், ரியாலிட்டி புரிந்து கவனமாக, புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். அந்த மாமனிதன் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. இரும்புப்பெண்மணி ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி. தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான இரட்டை இலை சின்னத்தை, அண்ணா உருவம் பொறித்த கொடியை கொண்ட கட்சி, அதை வீணாக்கிவிடாதீர்கள்.அமித்ஷாவின் மண்டகொழுப்பும், அண்ணாமலையின் வாய்கொழுப்பும் சேர்ந்துதான் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக பாஜக கூட்டணி உடைய காரணமாக இருந்தது. அதே போல அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ரெண்டு மாதம் முன்பு பஞ்சர் ஒட்டிய கூட்டணி மீண்டும் புட்டுக்கும். எடப்பாடியார் அவர்களே கவனமாக முடிவெடுங்கள். அதிமுக தவெக விசிக புதிய தமிழகம் முடிந்தால் நாம் தமிழர் கட்சியை சேர்த்து கூட்டணி அமைத்தால் 150 - 175 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி. திமுகவின் ஸ்லீப்பர் செல்லான தமிழக பாஜக, பாமக தேமுதிக நம்பகமான கட்சிகள் அல்ல. அதைவிடுத்து திமுகவுடன் கள்ளக்கூட்டணியில் இருக்கும் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், க்ரிப்டோ-கிருஸ்தவர்கள், தலித்துகள் வாக்குகள் அரை சதவிகிதம் கூட உங்க கூட்டணிக்கு கிடைக்காது. பிறகு வழக்கம் போல மைனாரிட்டி மற்றும் தலித் வாக்குகள் 20 - 25 சதவிகிதம் பல்க்காக கட்டுமர கம்பெனி அள்ளிக்கிட்டு போயிடும். மீதமுள்ள 75 சதவிகித ஹிந்து வாக்குகள், அதில் 35 சதவிகித ஹிந்துக்கள் ஒட்டு போடவே வரமாட்டாய்ங்க. இப்போ தவறவிட்டால் இனி எப்போதும் கிடையாது எடப்பாடியாரே.


theruvasagan
ஜூன் 28, 2025 21:59

கூட்டணி ஆட்சி பற்றி பேசுவது ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்று பேசிவரும் டீம்கா அல்லக்கை கட்சிகளை நிச்சயமாக இன்னும் உசுப்பேத்தும்.


விஸ்வநாத் கும்பகோணம்
ஜூன் 28, 2025 21:02

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்காக எப்போதும் ஓட்டு போட்டதில்லை. மறுபடியும் திமுக வெற்றிக்கு அமித்ஷா வழி வகுத்து விட்டார். அவருக்கு இருப்பதாக சொல்லப்படும் சாணக்கியத்தனம் தமிழக மக்களிடம் எடுபடாது. ஏமாறுவது பிறவிக் குணம். திமுகவிற்கு பொற்காலம்.


Kulandai kannan
ஜூன் 28, 2025 19:58

அதிமுக தனித்து ஆட்சியமைத்தால், 2031ல் திமுக விடம் ஆட்சியை தாரை வாரத்து விடும். அந்த அளவுக்கு லஞ்சம், ஊழல், ரவுடியிஸம் தலைவிரித்தாடும். இந்து விரோத கோஷ்டிகள் தடையில்லாமல் இயங்கும்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 28, 2025 19:55

ஒரு நல்ல அடிமை வியாபாரி அடிமைகளை போட்டிக்கு தயார் செய்வதற்கு முன்னாடியே கையில் பிரம்பு இருக்கு என்பதற்காக போட்டு வெளுத்து வாங்கி அடிமையோட கையையும் காலையும் உடைத்து விட்டு போட்டிக்கு தயார் செய்யும் அடிமை வியாபாரியை உலகம் பார்த்ததுண்டா ??? இப்போ பார்க்கிறோம் அப்படிப்பட்ட அடிமை வியாபாரி பற்றி பொதுஜனம் என்ன மாதிரி எண்ணம் வைக்கும் ??


Neelachandran
ஜூன் 28, 2025 19:24

அமைதி காப்பது துணிவின்மையே காட்டும்.


முருகன்
ஜூன் 28, 2025 19:21

அமித் ஷா நினைப்பவர் தான் முதலமைச்சர் இதில் மேலிடம் வருத்தம் என்ன வேண்டி உள்ளது அவர் ஒன்றும் ஜெயலலிதா கிடைக்காது


M SELVARAJ
ஜூன் 28, 2025 17:32

இப்படியே மெளன சாமியாராக இருந்தால், எதிர் முகாமினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டியது தான். இது தொண்டர்களிடமும் ஒருவித மனச்சோர்வை ஏற்ப்படுத்தி விடும். கூட்டணி ஆட்சி என்பது தேர்தல் முடிந்த பின்னர் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். இப்பொழுதே கூட்டணி ஆட்சி என்றால், அதிமுக தொண்டர்கள் பிஜேபிக்கு வேலை செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களும் எப்பொழுதுமே கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். 1980 தேர்தலில் முன்னதாகவே கூட்டணி ஆட்சி என்று அறிவித்து விட்டு திமுக-காங்கிரஸ் அணி தேர்தலை சந்தித்த போது மக்கள் அதனை நிராகரித்த முன்னுதாரணம் இருக்கிறது. பிஜேபி கொஞ்சம் எஜமான மனப்பான்மையிலிருந்து விடுபட்டு கள யதார்த்தத்தை உணர்ந்து பொது வெளியில் பேச வேண்டும். இல்லையெனில் இது இந்த கூட்டணியின் தோல்விக்கு வழி வகுக்கும். செல்வராஜ், மதுரை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை