வாசகர்கள் கருத்துகள் ( 35 )
ஊருக்கு மூன்று அரசு மருத்துவமனைகள் கட்டப்படவேண்டும். வளர்ந்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற போதுமான மருத்துவமனைகள், டாக்டர்கள் இல்லை. இலவச பணம் அல்லது இலவச மகளிர் பேருந்து தேவை இல்லை. திருட்டு திராவிடம் செய்ய வேண்டியதை செய்யாமல், இலவசங்களை கொடுத்து கொண்டிருக்கிறது.
கோவில் நீதிமன்றம் மருத்துவம் எல்லாம் நல்லவங்க கிட்ட தான் இருக்கனும்
குத்திய இளைஞர் நீதிமன்றத் காவலில் உள்ளார் ..... இதுவரை அவர் மட்டுமே தனது தாயைக் கவனித்து வந்ததாகத் தெரிகிறது .... இனி அவரது தாயைக் கவனிக்கப்போவது யார் ????
அரசு மருத்துவர்களே , நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா, உங்களுக்கு ஆதரவாக எந்த ஒரு பொதுமக்களும் திரளவில்லையே , ஏன் ? உங்கள் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பரிவாக பேசும் நீங்கள், அதில் பாதி அளவாவது பரிவாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பேசினால் நன்றாக இருக்கும், அதிலேயே பாதி குணமடைந்து விடுவார்கள், நோயைப்பற்றி விரிவாக கேள்வி கேட்டால் எரிந்து விழுந்து துரத்தி அடிக்கிறீர்கள் அது ஏன்?, அரசிடம் என்றைக்காவது மருத்துவமனையின் தரத்தை உயர்த்த, கழிப்பிட வசதியை அதிகரிக்க சொல்லி போராட்டம் செய்திருக்கிறீர்களா?, மக்கள் இலவசமாக சிகிச்சை பெறுவது என்பது பிச்சை அல்ல அது அவர்களின் உரிமை, நமது அரசாங்கத்தின் கடமை
மிக சரியான கருத்து. ஏழை மக்கள் வரும் போது எத்தனை மருத்துவர்கள் முகம் சுளித்துக்கொண்டு எடுத்தெறிந்து பேசுபவர்களை நான் பார்த்துள்ளேன். உங்களை வந்து தொல்லை படுத்துவது அவர்கள் நோக்கம் அல்ல.
இவிங்க தொடர் போராட்டம் நடத்தினால் இவர்களுக்கு எதிராக மக்களே திரண்டு போராட ஆரம்பித்து விடுவார்கள் ...
அரசாங்கம் தாக்கப்பட்ட மருத்துவருக்கே சப்போர்ட் செய்யும். மருத்துவருக்கு சங்கம் பின்புலம் இருக்கிறது. சங்கங்களை கண்டு பயப்படாத அரசு இல்லை. ஆனால் கத்தியால் தாக்கிய பையனின் பக்கம் என்ன பிரச்சனை என்பதை யாரும் கவனிப்பதில்லை. அரசும் கண்டுகொள்ளாது. ஏனென்றால் மக்களிடம் ஒற்றுமை இல்லை/ . அவர்களுக்கு ஞாயத்தை பற்றி கவலை இல்லை. இதே நிலைமை சாமானிய மக்கள் எவருக்கும் அடிக்கடி வரலாம். சகித்துக்கொண்டு போகவேண்டும். அவ்வளவுதான்.
ஒரு ஆளு அரசு மருத்துவருக்கு ஆதரவாக கருத்து எழுதுகிறார்களா ??? இதில் இருந்தே அவர்கள் லச்சனத்தை தெரிந்து கொள்ளலாம் ..
tamilnadu government doctors are thieves.
கோவை அரசு மருத்துவமனை சூப்பரா இருக்கிறது. நல்ல பெரிய இடம். சுத்தமா இருக்கு. நல்ல டாக்டர்கள், நர்ஸ்கள், வார்டுபாய்கள். எங்கேயும் பணம் கொடுக்க வேண்டாம்.
அது சரி ..... இந்த நிலை இந்த ஆட்சியில் மட்டும்தான் ஏற்பட்டதா ????
தமிழ் நாட்டை விட கேரளா அரசு மருத்துவமனை எவ்வளவோ மேல் ..
அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்களின் செயல்பாடுகள் மகா மட்டம் என்பது அனைவரும் அறிந்தஒன்று. அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகள் இருந்தும் தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடுவதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவர்களின் மோசமான அணுகுமுறைதான்.